வந்தே பாரத் திட்டத்தின்கீழ் துபாயிலிருந்து கேரளாவுக்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் போயிங் விமானம் நேற்றிரவு விபத்துக்குள்ளானது .
பயணம் செய்த 191 பேரில் இரண்டு விமானிகள் உட்பட 17 பேர் மரணம் அடைந்துள்ளனர். 13 பேர் ஆபத்தான நிலையிலும் 50 க்கும் மேற்பட்டோர் படுகாயமும் அடைந்துள்ளனர். இந்நிலையில் விபத்துக்குள்ளானவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்புகொள்ள அவசர உதவி எண்களை கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.