இந்தியா

“கொரோனா நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை” - மத்திய அரசு வேதனை

webteam

கொரோனா நெறிமுறைகள் பின்பற்றபடுவதில்லை என மத்திய அரசு வேதனை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லவ் அகர்வால் “மலைப்பிரதேசங்களுக்கு பயணம் மேற்கொள்வோர் கொரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றபடுவதில்லை. கொரோனா நெறிமுறைகள் பின்பற்றப்படாதது தொடர்ந்தால் தளர்வுகள் ரத்து செய்யப்படும். இதுவரை கிடைத்த பலனெல்லாம் தற்போதைய விதிமீறல்களால் அழிந்துவிடும்” எனத் தெரிவித்தார்.