இந்தியா

விசாரணை கைதி உயிரிழந்ததால் காவல்நிலையத்தை சூறையாடிய மக்கள்

webteam

உத்தரபிரதேச மாநிலம் ஃபாருக்காபாத் பகுதியில் காவல்நிலையத்தை அப்பகுதி மக்கள் அடித்து நொறுக்கினர். 

உத்தரபிரதேச மாநிலம் ஃபாருக்காபாத்-ல் அண்மையில் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் காவல்நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்து காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். 

அப்போது தி‌டீரென வன்முறை ஏற்பட்டது. இதில், காவல்நிலையத்தை அடித்து நொறுக்கிய பொதுமக்கள், வாகனங்கள் மீது கல்வீசியும், தீவைத்தும் எரித்தனர். இதனால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்த நிலையில் பாதுகாப்பு பணிக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.