இந்தியா

தங்கக் கடத்தல் வழக்கில் சில கேரள அமைச்சர்கள் சிக்குவார்கள் : ஜெ.பி.நட்டா

JustinDurai

தங்கக் கடத்தல் வழக்கு உலகெங்கிலும் உள்ள கேரள மக்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது என பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

கேரளா மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் கேரளாவிற்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, திருவனந்தபுரத்தில் நடந்த கூட்டத்தில் பேசினார்.

அப்போது அவர், ‘’முதல்வர் அலுவலகத்தின் தங்கக் கடத்தல் வழக்கு கேரளா மட்டுமல்ல உலகில் வாழும் அனைத்து மலையாள மக்களுக்கும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் பினராயி விஜயன் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார். விசாரணை முடிவிற்கு வரும்போது மேலும் பல அமைச்சர்கள் வெளிச்சத்திற்கு வருவார்கள்'' என்று கூறினார்.