இந்தியா

''பெகாசஸ் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்'' - ராகுல் காந்தி

கலிலுல்லா

பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் விசாரிக்க முன்வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பெகாசஸ் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பி, விவாதம் நடத்த வலியுறுத்தப் போவதாக கூறினார். ஆனால், மத்திய அரசு ஒருபோதும் விவாதம் நடத்த தயாராக இருக்காது என்றும் தெரிவித்தார்.

முதலமைச்சர்கள், முன்னாள் பிரதமர்கள் உள்ளிட்டவர்களுக்கு எதிராக பெகாசஸ் மென்பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும், ஒட்டுகேட்பு தகவல்களை பிரதமரும், உள்துறை அமைச்சரும் வைத்திருக்கிறார்களா என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.