இந்தியா

ஜன.29 முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் - சபாநாயகர் ஓம் பிர்லா

sharpana

ஜனவரி 29 முதல் நாடாளூமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

 ’மக்களவை மாலை 4 மணி முதல் இரவு 9 மணிவரையும் மாநிலங்களவை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரையும் நடைபெறும். நேரமில்லா நேரம், கேள்வி நேரம் நடைபெறும். நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்பு அனைத்து உறுப்பினர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும். கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்ட உறுப்பினர்கள் மட்டுமே கூட்டத்தொடரில் அனுமதிக்கப்படுவர்’ என்று ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.