இந்தியா

இன்று கூடுகிறது நாடாளுமன்றம் : டெல்லி பிரச்னையை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

இன்று கூடுகிறது நாடாளுமன்றம் : டெல்லி பிரச்னையை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

webteam

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கும் நிலையில், டெல்லி பிரச்னை குறித்து கேள்விகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்குகிறது. இதில் டெல்லி வன்முறை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. பிப்ரவரி ஒன்றாம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த 11-ஆம் தேதி நிறைவுபெற்றது. இந்நிலையில் இன்று 2-வது அமர்வு தொடங்குகிறது.

இத்தொடரின்போது பட்ஜெட் மீதான விவாதத்திற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளிக்கிறார். மேலும், நடப்பு தொடரில் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது உள்ளிட்ட 45 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதேநேரத்தில், டெல்லியில் நிகழ்ந்த வன்முறை, பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. குறிப்பாக, டெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தும் எனத் தெரிகிறது.