இந்தியா

எல்லையில் பாக். அத்துமீறல்: இந்தியா பதிலடி

webteam

இந்திய எல்லைப்பகுதி கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பாலக்கோட் மற்றும் மஞ்சகோட் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் எல்லையோர கிராமங்களைச் சேர்ந்த 4 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து படுகாயமடந்தவர்கள் மீட்கப்பட்டு, அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் படையினரின் இந்த தாக்குதலுக்கு, இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.