இந்தியா

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் கோரி மனு

Rasus

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், சிபிஐ சிறப்பு நீதிமன்றம் செப்டம்பர் 19-ஆம் தேதி வரை சிதம்பரத்தை சிறையில் அடைக்க உத்தரவிட்ட நிலையில் அவர் திகார் அறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இவ்வழக்கில் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அத்துடன் சிபிஐயின் கைது நடவடிக்கை மற்றும் நீதிமன்றக் காவலை எதிர்த்தும் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.