இந்தியா

கேரளா: 50 அடி பள்ளத்தில் மொத்தமாக கழிழ்ந்த பேருந்து... 20 பேர் படுகாயம்; ஒருவர் உயிரிழப்பு

webteam

மூணாறு அருகே கேரள அரசுப் பேருந்து 50 அடி பள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

தமிழக கேரள எல்லையை இணைக்கும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் இருந்து, 60 பயணிகளுடன் கேரள அரசுப் பேருந்து எர்ணாகுளம் கிளம்பியது. அப்போது மூணாறு அருகே சாக்கோச்சன் வாலியில் சென்றபோது பேருந்து, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. தகவல் அறிந்து அடிமைலி போலீஸார், தீயணைப்புத் துறையினர், பொதுமக்கள் இணைந்து பேருந்துக்குள் இருந்தவர்களை மீட்டனர்.

விபத்தில் வாளற குளமக்குழியை சேர்ந்த சஜீவ்ஜோசப் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் அடிமாலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அடிமாலி போலீசார் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்தை மீட்கும் பணி நடந்து வருகிறது.