இந்தியா

நெருங்கும் சுதந்திர தினம்: தேசியக்கொடியை டிபி-யாக மாற்றும் பாஜக பிரமுகர்கள்

webteam

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு  மத்திய அமைச்சர்கள், பாஜக மூத்த நிர்வாகிகள் தங்களது சமூக வலைதள பக்கங்களுக்கான டிபியை மாற்றி வருகிறார்கள்.

வரும் 15ஆம் தேதி நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதை முன்னிட்டு சமூக வலைதளப் பக்கங்களில் தேசியக் கொடியை வைக்க வேண்டுமென பிரதமர் கேட்டுக் கொண்டார். இதைத்தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகிகள், மத்திய அமைச்சர்கள், பாஜக மாநில தலைவர்கள் ஆகியோர் தங்களது சமூக வலைதள பக்கங்களுக்கான டிபியை மாற்றி வருகிறார்கள்.

தமிழகத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை., மத்திய அமைச்சர் எல்.முருகன்., நடிகை குஷ்பூ, பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், புதுச்சேரி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் தங்களது டி.பி.யை மாற்றி அதற்கு பதிலாக தேசியக் கொடியை தங்களது டிபியாக வைத்துள்ளனர் உள்ளனர். இதே போல பாரதிய ஜனதா கட்சியின் பல்வேறு தொண்டர்கள் நிர்வாகிகள் தங்களது டி.பி.யை மாற்றி வருகிறார்கள்.