இந்தியா

ஜம்முவில் விமானப்படை தளத்தின் மீது ட்ரோன் மூலம் தாக்குதல் - விசாரணை தீவிரம்

webteam

ஜம்முவில் ட்ரோன் மூலம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜம்முவில் விமானப்படை தளத்தின்மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்து ஜம்மு, காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பாதுகாப்பு படையினரை தாக்க முயற்சி என்பதால் தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது.