ஒடிசா ரயில் விபத்து
ஒடிசா ரயில் விபத்து twitter
இந்தியா

அரசு அதிகாரிகளின் அலட்சியமே ஒடிசா ரயில் விபத்துக்குக் காரணம்! - காங்கிரஸ் எம்.பி.!

PT WEB

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று (ஜூன் 2) இரவு 7 மணி அளவில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வரவில்லை. அதேநேரம் ரயில் விபத்திற்கான காரணம் குறித்து அறியப்பட்டு வருகிறது. இந்த ரயில் விபத்தில் தற்போது வரை 288 பேர் பலியாகி இருப்பதாகவும், 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில், ”ஒடிசாவில் நேற்று இரவு 7 மணியளவில் ஏற்பட்ட ரயில் விபத்துக்கு அரசு அதிகாரிகளின் அலட்சியமே காரணம்” என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. செல்லகுமார் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசியது குறித்து கேட்க இந்த வீடியோவைப் பார்க்கவும்.