மோடி- மல்லிகார்ஜுன கார்கே
மோடி- மல்லிகார்ஜுன கார்கே PT
இந்தியா

ஒடிசா ரயில் விபத்து: பிரதமர் மோடிக்கு 11 கேள்விகளை எழுப்பிய மல்லிகார்ஜுன கார்கே!

PT WEB

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒடிசாவின் பாலஸோரில் நிகழ்ந்தது, இந்திய ரயில்வே வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான ரயில் விபத்தாகும். விலைமதிப்பற்ற பல உயிர்கள் பறிபோயிருப்பது ஒவ்வொரு இந்தியனையும் உலுக்கியிருக்கிறது.

Train Accident

இந்தியாவில் ஒரு நாளில் ரயிலில் பயணிப்போரின் எண்ணிக்கை ஆஸ்திரேலியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகைக்கு இணையானது என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, விபத்து தொடர்பாக 11 கேள்விகளை முன்வைத்து பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ரயில் விபத்தை சதி எனக் கூறிய மோடி இப்போது என்ன சொல்லப் போகிறார்? என்ற பெரிய கேள்வியையும் முன்வைத்துள்ளார்.