இந்தியா

ஏர்போர்ட்டில் விஐபி நடைமுறையா?: அமைச்சர் விளக்கம்

webteam

இந்திய விமான நிலையங்களில் விஐபி நடைமுறை ஏதும் பின்பற்றப்படுவதில்லை என்று சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். 

விமான நிலையங்களில் பாதுகாப்பு அடிப்படையில் மட்டுமே பயணிகளின் வேறுபாடு கடைபிடிக்கப்படுவதாகவும், அமைச்சர்கள் பாதுகாப்பு சோதனை வழியாக செல்வதில் இருந்து விலக்கு மட்டுமே கிடைப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 
அண்மையில் சகோதரர் இறப்புக்காக பாட்னா செல்ல வேண்டிய நிலையில் விஐபி நடைமுறையால் விமானம் தாமதமானதாக மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தனத்துடன் பெண் மருத்துவர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். அதுகுறித்து இப்போது அமைச்சர் ஜெயந்த் சின்ஹா விளக்கம் அளித்துள்ளார்.