இந்தியா

சுஷாந்துக்கு திரையுலகத்தில் யாரும் உதவிக்கரம் நீட்டவில்லை - சிகை அலங்கார நிபுணர்

webteam

தொழில்துறையில் யாரும் சுஷாந்துக்கு ஆதரவாக நிற்கவில்லை என பிரபல சிகை அலங்கார நிபுணர் சப்னா பவானி தெரிவித்துள்ளார்

 தோனியின் சுயசரிதை படத்தில் நடித்த இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இன்று மும்பையில் அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது இந்தியத் திரையுலகத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. பல்வேறு துறையைச் சார்ந்தவர்களும் சுஷாந்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் 34 வயதான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 6 மாதங்களாகத் தீவிர மன அழுத்தத்தில் இருந்ததாக காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 இந்நிலையில் சுஷாந்த் சிங்கின் மரணம் குறித்து ட்வீட் செய்துள்ள பிரபல சிகை அலங்கார நிபுணர் சப்னா பவானி, ''கடந்த சில ஆண்டுகளாக சுஷாந்த் மிகவும் கடினமான சூழலில் தான் இருந்தார் என அனைவருக்கும் தெரியும். அது ரகசியமல்ல. தொழில்துறையில் யாரும் அவருக்கு ஆதரவாக நிற்கவில்லை, அவர்கள் உதவி கரம் கொடுக்கவில்லை. இன்றைய ட்வீட்கள் இந்த துறை எவ்வளவு மேம்போக்கானது என்பதற்கு சாட்சி. இங்கே யாரும் உங்கள் நண்பர் இல்லை'' எனத் தெரிவித்துள்ளார்.