இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என நேற்று அறிவித்தது டில்லி ராணுவ மருத்துவமனை.
‘கோமா நிலையில் உள்ள அவர் வெண்டிலேட்டர் சப்போர்டில் பல துறைகளை சார்ந்த மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்துவருகிறார்’ என்று மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்களன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவரது உடல்நிலை குறித்த வதந்திகள் சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சூழலில் அவரது குடும்பத்தினர் அதை மறுத்துள்ளனர்.
‘என் தந்தை பிரணாப் முகர்ஜி உயிருடன் இருக்கிறார்’ என அவரது மூத்த மகனும், முன்னாள் காங்கிரஸ் எம்.பி.யுமான அபிஜித் ட்வீட் செய்துள்ளார்.