இந்தியா

விவசாயிகள் பிரச்சனையில் கண்டிப்பு கூடாது: சுப்ரீம் கோர்ட்

webteam

கடன் வசூல் நடவடிக்கையின்போது வங்கிகள் விவசாயிகளின் பொருட்களை ஜப்தி செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் 
உத்தரவிட்டது. 

தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலையை தடுக்க, வங்கிகள் விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய உத்தரவிட வேண்டும் என
உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடன் வசூல் நடவடிக்கையின் போது விவசாய பொருட்களை ஜப்தி செய்யக் கூடாது, கடன்களை வசூலிக்கும் போது கண்டிப்புடன் நடக்கக்கூடாது. விவசாயிகள் நலன் சார்ந்த பிரச்னைகளில் முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.