இந்தியா

இன்று மாலை 4 மணிக்கு பொருளாதார திட்டங்களை அறிவிக்கிறார் நிர்மலா சீதாராமன்

இன்று மாலை 4 மணிக்கு பொருளாதார திட்டங்களை அறிவிக்கிறார் நிர்மலா சீதாராமன்

webteam

பிரதமர் மோடி கூறிய ரூ.20 லட்சம் கோடி திட்ட அறிவிப்புகளை இன்று மாலை 4 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுகிறார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் நேற்று உரையாற்றினார் அப்போது “கொரோனா பாதிப்பு மனிதர்களுக்கு நிறைய பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளது. ஒரு வைரஸ் உலகத்தில் பெரும் நாசத்தை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் உறுதியுடன் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும். 

உலகின் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்தியாவுக்கு முக்கியமான வாய்ப்பை இந்த சூழல் கொண்டுவந்திருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சியில் பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவின் வளர்ச்சி ஐந்து முக்கிய அம்சங்களை கொண்டிருக்கிறது. இந்திய மருத்துவர்கள் உலகிற்கே தன்னம்பிக்கை கொடுத்து வருகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்திய பொருளாதாரத்தை மீட்பதற்காக ரூ. 20 லட்சம் கோடிக்கு பொருளாதார திட்டங்கள் வெளியிடப்படும் என்றார். இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவின் பொருளாதாரம் ஊக்கம் பெரும் எனவும் குறிப்பிட்டிருந்தார். என்னென்ன அறிவிப்புகள் என்று மத்திய நிதி அமைச்சர் அறிவிப்பார் எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் டெல்லியில் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை 4 மணிக்கு வெளியிடுகிறார். இதில் சிறு குறு தொழில் நிறுவனங்கள், விவசாயிகள் நலன் காக்கும் திட்டங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.