இந்தியா

ஜம்மு காஷ்மீரில் 9 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை

PT WEB

ஜம்மு-காஷ்மீரில் 9 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தி வருகிறது.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள விமானப் படை தளத்தின் மீது கடந்த மாதம் ட்ரோன்களில் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். அதனைதொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதிகளில் அடிக்கடி ட்ரோன்கள் பறந்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.2நாட்களுக்கு முன்பு சம்பா மாவட்டத்தில் 3 வெவ்வேறு இடங்களில் ட்ரோன்கள் பறந்தன.

இந்த நிலையில், இது போன்ற ட்ரோன்களை இயக்குவது யார் என்பதை கண்டறிய, ஜம்மு, ராம்பன் அனந்த்நாக், சோபியான் உள்ளிட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.