இந்தியா

உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக வாக்காளர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு

webteam

உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக கரூரை சேர்ந்த ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக கரூரை சேர்ந்த முருகேசன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் மறைமுக தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அத்துடன் வார்டுகள் மறுவரையறை செய்யக்கோரியும் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.

ஏற்கெனவே உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக திமுகவின் கூட்டணி கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.  இந்தச் சூழலில் தற்போது வாக்காளர் ஒருவரும் மனு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.