டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் pt web
இந்தியா

டெல்லி குண்டு வெடிப்பு... பாதுகாப்பில் கோட்டை விட்டது யார்?., அமித் ஷா-வை சாடும் 'முரசொலி'

டெல்லி குண்டு வைப்பு தொடர்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) அதிகாரபூர்வ நாளிதழான முரசொலி தலையங்கம் எழுதியிருக்கிறது. அதில், சம்பவத்திற்கு அமித்ஷா பொறுப்பேற்க வேண்டாமா? என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.

திவ்யா தங்கராஜ்

டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக முரசொலி, அமித் ஷா மற்றும் ரேகா குப்தாவை கடுமையாக விமர்சிக்கிறது. செங்கோட்டையில் நடந்த இந்த பயங்கர சம்பவம், பாதுகாப்பில் ஏற்பட்ட கோளாறுகளை வெளிப்படுத்துகிறது. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத அமைப்புகளின் தொடர்பு, கார் குண்டு வெடிப்பு மற்றும் அதற்கு முன் நடந்த வெடிமருந்து கைப்பற்றல் ஆகியவற்றை முரசொலி சுட்டிக்காட்டுகிறது.

டெல்லி குண்டு வெடிப்பு தொடர்பாக திமுகவின் அதிகாரபூர்வ நாளிதழான முரசொலி, அமித் ஷா மீதும் டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து தலையங்கம் எழுதியிருக்கிறது. குண்டு வெடிப்பு நடந்தது சாதாரண பகுதியில் இல்லை, செங்கோட்டையில். குண்டு வெடிப்பில் பயன்­ப­டுத்­தப்­பட்ட கார், அரி­யானா மாநி­லத்­தைச் சேர்ந்­த­வ­ரு­டை­யது என்­றும், தீவி­ர­வாத அமைப்­பைச் சேர்ந்­த­வர்களுக்­குச் சொந்­த­மா­னது என்­றும் தெரிய வந்­துள்­ளது.

டெல்லி கார் வெடிப்பு சம்பவம்

காஷ்­மீர் புல்­வாமா பகு­தி­யைச் சேர்ந்த மருத்­து­வர் உமர் முக­மது காரை ஓட்டி வந்­துள்­ளார். அவ­ரும் உயி­ரி­ழந்து விட்­டார். பாகிஸ்­தா­னில் இருந்து செயல்­ப­டும் "ஜெய்ஷ் இ முக­மது" அமைப்­புக்கு இதில் தொடர்பு இருப்­ப­தாக டெல்லி போலீஸ் சொல்லி இருப்பதையும் முரசொலி குறிப்பிட்டுள்ளது. மேலும், குண்­டு­ வெ­டிப்­பில் அம்­மோ­னி­யம் நைட்­ரேட், எரி­பொ­ருள் எண்­ணெய், டெட்­ட­னேட்­டர்­கள் பயன்­ப­டுத்­தப்­பட்டு இருக்­கி­றது. சில நாட்­க­ளுக்கு முன்­னாள் ஃபரி­தா­பாத்­தில் ஏரா­ள­மான வெடி ­ம­ருந்­து­கள் கைப்­பற்­றப்­பட்­டது. அதற்­கும் இந்­தச் சம்­ப­வத்­துக்­கும் தொடர்பு இருக்­க­லாம் என புல­னாய்வு அமைப்­பி­னர் கரு­து­கி­றார்கள்.

கார் குண்டு வெடிப்பு நேரத்து புதிய சி.சி.டி.வி. காட்­சி­கள் தற்போது வெளி­யாகி உள்­ளன. செங்­கோட்டை பார்க்­கிங் பகு­தி­யில் 3 மணி­நே­ரம் அந்­தக் கார் நிறுத்­தப்­பட்டு இருந்­துள்­ளது. HR 26 CE 7674 என்ற பதி­வெண் கொண்ட ஹூண்­டாய் ஐ20 கார், மாலை 3.19 மணிக்கு உள்ளே நுழை­வ­தும், பின்­னர் 6.30 மணிக்கு வெளி­யே­று­வ­தும் சி.சி.டி.வி.யில் பதி­வா­கி­யுள்­ளது என்று சம்பவம் குறித்து குறிப்பிட்ட முரசொலி, நேரில் பார்த்தவர்கள் கூறிய விஷயங்களையும் குறிப்பிட்டுள்ளது. அதோடு “இது ஒரு துர­திஷ்­ட­மான சம்­ப­வம்” என்று சொல்லி அமை­தி­யாகி விட்­டார் டெல்லி பா.ஜ.க. முத­ல­மைச்­சர் ரேகா குப்தா. அவ­ரது கடமை அவ்­வ­ளவு தானா? அவ­ருக்கு வேறு எந்­தப் பொறுப்­பும் இல்­லையா? கட­மை­யும் இல்­லையா? என்று முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது.

அமித் ஷா மற்றும் டெல்லி முதல்வர் ரேகா குப்தா

“டெல்லி குண்டு வெடிப்­பில் சதி செய்த, ஈடு­பட்ட ஒவ்­வொ­ரு­வ­ரும் எங்­கள் விசா­ரணை அமைப்­பு­க­ளின் முழு­மை­யான நட­வ­டிக்­கைக்கு உள்­ளா­வார்­கள்” என்று உள்­துறை அமைச்­சர் அமித்ஷா சொல்லி இருக்­கி­றார். ‘அமித்ஷா ஆவே­சம்’ என்று ஊட­கங்­கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன. சம்­ப­வத்­துக்கு முன்­னால் உள்­துறை அமைச்­சர் என்ன செய்து கொண்டு இருந்­தார்? சம்­ப­வங்­கள் நடக்­கா­மல் இருக்க என்ன செய்­யப்­பட்­டது?

கார் குண்டு வெடிப்பு நடப்­ப­தற்கு சில மணி நேரத்­துக்கு முன்பு தான். அரி­யானா மாநி­லத்­தில் ஃபரி­தா­பாத் என்ற இடத்­தில் உள்ள அடுக்கு மாடி குடி­யி­ருப்­பில் இருந்து 3 ஆயி­ரம் கிலோ எடை கொண்ட வெடி பொருட்­கள் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது. அதில் பயங்­கர வெடி பொருட்­க­ளைத் தயா­ரிக்­கக் கூடிய 350 கிலோ எடை கொண்ட அம்­மோ­னி­யம் நைட்­ரேட் இருந்­ததை காவல் துறை­யி­னர் கண்­டு­பி­டித்­த­னர். அதைத் தொடர்ந்து இது நடந்­துள்­ளது.

டெல்லி குண்டு வெடிப்பு

அரி­யா­னா­வில் இப்­போது ஆட்சி செய்­வ­தும் பா.ஜ.க. தான். பா.ஜ.க. அல்­லாத மாநி­லத்­தில் இப்­படி ஒரு சம்­ப­வம் நடந்­தி­ருந்­தால், பா.ஜ.க.வினர் எத்­த­கைய வார்த்தை வெடி­குண்­டு­களை வீசு­வார்­கள் என்­பதை அனை­வ­ரும் அறி­வோம். ஆனால் இப்­போது சம்­ப­வம் பா.ஜ.க. ஆளும் மாநி­லத்­தில் நடந்­த­தால் அமை­தி­யாகி விட்­டார்­கள்.

குண்டு வைத்­தது யார் என்று கண்­டு­பி­டித்­து­விட்­டார்­கள். பாது­காப்­பில் கோட்டை விட்­டது யார் என்­ப­தும் அனை­வர்க்­கும் தெரி­யும். பொறுப்­பான அவர்­கள் பொறுப்­பேற்க வேண்­டாமா? என்று முரசொலி கேள்வி எழுப்பியிருக்கிறது.