இந்தியா

பிளாஸ்டிக் பையில் சுற்றி வீசப்பட்ட பெண்ணின் சடலம்: மகளிடம் போலீஸார் விசாரணை

JustinDurai

மும்பையில் பெண்ணின் உடல் பிளாஸ்டிக் பையில் அடைத்து வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை லால்பாக் பகுதியில் 53 வயதான பெண் ஒருவரின் உடல் சிதைந்த நிலையில் பிளாஸ்டிக் பையில் அடைத்து வீசப்பட்டுக் கிடந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் விரைந்துவந்த காவல்துறையினர் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இறந்த பெண்ணின் 22 வயது மகளிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததை தொடர்ந்து, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பான விவரங்கள் எதுவும் முழுமையாக வெளியாகவில்லை.