விநாயகர் சதுர்த்தியையொட்டி மும்பை நாளை முதல் 19ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு மும்பை காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்ல அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.நாளை முதல் 19ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் ஓரிடத்தில் 5 பேருக்கு மேல் கூட கூடாது என்றும் அறிவித்துள்ள மும்பை காவல்துறை, மக்கள் ஆன்லைனில் சாமி தரிசனம் செய்து கொள்ளலாம் எனக் கூறியுள்ளது.