இந்தியா

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் - மத்திய நீர்வள ஆணையத்திற்கு ஓபிஎஸ் கண்டனம்

Veeramani

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மறு ஆய்வு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த மத்திய நீர்வள ஆணையத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அணை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்காமல், அணை பாதுகாப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என மத்திய நீர்வள ஆணையம் மனுதாக்கல் செய்திருப்பது நியாயமற்றது என குறிப்பிட்டுள்ளார்.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமை என்றும், பேபி அணை மற்றும் அணை பகுதிகளை வலுப்படுத்த மரங்களை வெட்டவும், அணுகு சாலையை சரி செய்யவும் அனுமதி வழங்க கேரள அரசுக்கு உத்தரவிடக் கோரியும் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.