இந்தியா

பெய்ரூட் வெடிவிபத்து : பிரதமர் மோடி இரங்கல்

பெய்ரூட் வெடிவிபத்து : பிரதமர் மோடி இரங்கல்

webteam

பெய்ரூட்டில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் மிகவும் சக்தி வாய்ந்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் தலைநகரமே ஆட்டம் கண்டுள்ளது. இந்த விபத்தில் சுமார் 78 பேர் உயிரிழந்ததாகவும் 4000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், பெய்ரூட்டில் ஏற்பட்ட வெடிவிபத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பெய்ரூட்டில் வெடிவிபத்தினால் ஏராளமான உயிரிசேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது. இது மிகவும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்காகவும் காயமடைந்தவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.