இந்தியா

அமீரகத்தின் உயரிய விருது பெறும் பிரதமர் மோடி 

அமீரகத்தின் உயரிய விருது பெறும் பிரதமர் மோடி 

webteam

பிரான்சில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

5 நாள் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, 2 நாள்கள் பிரான்சில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதைத் தொடர்ந்து, அங்கிருந்து புறப்பட்ட அவர், தனி விமானம் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு நேற்றிரவு சென்றார். அபுதாபி விமான நிலையத்தில், பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயாத் அல் நயான் மோடியை கட்டியணைத்து வரவேற்றார். விமான நிலையத்தில் அபுதாபி ராணுவ வீரர்களும் இந்திய பிரதமருக்கு மிடுக்கான வரவேற்பை அளித்தனர்.

இந்தப் பயணத்தில் இரு நாட்டு நல்லுறவுகள் குறித்து, இரு தலைவர்களும் பேசுகின்றனர். மேலும், அமீரகத்தின் உயரிய விருதான ஆர்டர் ஆப் சயாத் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட உள்ளது.