இந்தியா

அரிவாளுடன் கடைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மர்ம கும்பல் - வீடியோ

அரிவாளுடன் கடைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மர்ம கும்பல் - வீடியோ

webteam

ஹைதராபாத் பழைய நகரத்தில் மர்மநபர்கள் சிலர் கடையை அடித்து நொறுக்கியுள்ளனர்.

ஹைதராபாத் மாநிலத்தின் பழைய நகரத்தில் நேற்று இரவு 9.30 மணியளவில் மர்ம நபர்கள் கடையை அடித்து நொறுக்கியுள்ளனர். அத்துடன் அவர்கள் அங்கிருந்தவர்களை அவர்கள் கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு மிரட்டியும் சென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில் குடி போதையில் சில மர்ம நபர்கள் கடையை அடித்து நொறுக்குகின்றனர். அத்துடன் அந்தக் கடையில் இருந்தவர்களை கூர்மையான ஆயுதங்களை கொண்டு மிரட்டுகின்றனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோவின் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கும் காட்சிகளும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. 

வீடியோ: நியூஸ்மினிட்

இந்தச் சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து காலபதர் காவல்துறையினர் இரண்டு நபர்களை கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள், “4 மர்ம நபர்கள் குடி போதையில் கடையை அடித்துள்ளனர். மேலும் ஃபாலாக்னுமா பகுதிக்கு செல்லும் வழியில் அவர்கள் இரண்டு கார்கள் மட்டும் ஆட்டோவின் கண்ணாடியையும் உடைத்துள்ளனர். எனினும் நாங்கள் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போது மர்ம நபர்கள் தப்பி ஓடினர்” எனத் தெரிவித்தனர்.