இந்தியா

“மீல் ஃபார் பிளாஸ்டிக்” - ஒடிஷா அரசின் புதுமையான திட்டம்

webteam

ஒடிஷாவில் நெகிழிப் பொருட்களை சேகரித்து தந்தால் இலவச உணவு வழங்கப்படும் என்ற புதுமையான திட்டத்தை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

ஆஹார் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் மாநிலத்தின் அனைத்து அலுவலகங்களிலும் MEAL FOR PLASTIC என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி சேகரித்து தரப்படும் அரை கிலோ நெகிழிப் பொருட்களுக்கு ஒரு வேளை உணவு வழங்கப்படுகிறது. ஒடிசாவை நெகிழி அற்ற மாநிலமாக மாற்றும் முயற்சியில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.