சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கோடை மழை. அக்னி நட்சத்திரம் தொடங்கிய முதல் நாளிலேயே , மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி.
ஆவடி, அம்பத்தூர் பகுதிகளில் மழைக்கு முன் வீசிய புழுதிக் காற்றால் மக்கள் அவதி. பூந்தமல்லியில் திரையரங்க மேற்கூரை சரிந்து விழுந்ததால் படம் பார்க்கச் சென்றவர்கள் அச்சம்.
கடலூர், சேலம், விழுப்புரம் மாவட்டங்களிலும் வெளுத்து வாங்கிய மழை. ஈரோடு, மதுரை, கோவையிலும் கோடை மழையால் தணிந்தது வெப்பம்.
திருச்சி சந்திப்பு ரயில் நிலையம் அருகே துணை மின் நிலையத்தை தாக்கிய மின்னல். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பெங்களூரு - மதுரை வந்தே பாரத் ரயில்சேவை பாதிப்பு.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் விமானப் படை தளபதி சந்திப்பு.. பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், பாதுகாப்பை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை.
காங்கிரஸ் கட்சியின் கடந்த கால தவறுகளுக்கு பொறுப்பேற்கிறேன் என அமெரிக்க பல்கலைக்கழக நிகழ்ச்சியில், சீக்கியர்கள் படுகொலை பற்றி மாணவர் கேள்விக்கு ராகுல் காந்தி பதில்.
திருப்பூரில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவியின் ஆடையில் இருந்த பட்டன்கள் அகற்றம். திருவாரூரில் தாலியை கழட்டி கணவரிடம் கொடுத்துவிட்டு தேர்வு எழுதச் சென்ற பெண்.
நீட் விவகாரத்தில், திமுகவின் பொய்யால் மாணவ, மாணவிகளின் உயிர் பறிபோவதாக இபிஎஸ் குற்றச்சாட்டு. முதல்வர் ஸ்டாலினுக்கு இப்போது கூட மனச்சாட்சி உறுத்தவில்லையா என எக்ஸ் தளத்தில் கேள்வி.
பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாதித்தது என்ன? என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கேள்வி.
சென்னையில் நகை வியாபாரியிடம் 20 கோடி மதிப்பிலான வைர நகைகள் திருட்டு. வியாபாரியை கட்டிப்போட்டுவிட்டு தலைமறைவான கும்பலுக்கு காவல் துறை வலைவீச்சு.
மயிலாடுதுறையில் திமுக கூட்டத்தில் திடீரென சரிந்து விழுந்த மின்விளக்குத்தூண்.. உடனடியாக சுதாரித்து விலகியதால் நூலிழையில் தப்பினார் திமுக எம்.பி. ஆ. ராசா.
சென்னை அருகே மத்திய அமைச்சர் ஜெ. பி.நட்டாவின் கார் , பழுதாகி விபத்தில் சிக்கிய விவகாரம். பாதுகாப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்.
தாராபுரம் அருகே பள்ளத்தில் விழுந்து தம்பதி உயிரிழந்த சம்பவம். பணியில் அலட்சியமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உறவினர்கள் கோரிக்கை.
இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையத்தின் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல். கடும் பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு காட்டம்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் லக்னோவை வீழ்த்தி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது பஞ்சாப் கிங்ஸ். ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில், ஒரு ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி த்ரில் வெற்றி.