இந்தியா

மும்பை: 20 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்து - இருவர் உயிரிழப்பு; பலர் காயம் என தகவல்

EllusamyKarthik

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அமைந்துள்ள 20 மாடி கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயம்பட்டு உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. மும்பையின் நானா சவுக் பகுதியில் அமைந்துள்ள பாட்டியா மருத்துவமனைக்கு அருகே அமைந்துள்ள பன்னடுக்கு மாடி கட்டடத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Major fire breaks out in 20-storey building near <a href="https://twitter.com/hashtag/Mumbai?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Mumbai</a>&#39;s Bhatia hospital; atleast 15 injured, 3 critical <a href="https://t.co/iKk6RGbsdc">pic.twitter.com/iKk6RGbsdc</a></p>&mdash; @Rakesh (@Rakesh5_) <a href="https://twitter.com/Rakesh5_/status/1484739895197573121?ref_src=twsrc%5Etfw">January 22, 2022</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script> 

முதற்கட்ட தகவலின்படி இந்த தீ விபத்து அந்த கட்டடத்தின் 18-வது மாடியில் இன்று காலை 7.30 மணி அளவில் ஏற்பட்டுள்ளது. 13 தீயணைப்பு வாகனங்களில் சென்ற மும்பை தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஐந்து ஆம்புலன்ஸ் வாகனங்களும் சம்பவ இடத்தில் உள்ளன. 

இருவர் உயரிழந்துள்ளதாகவும், மூவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.