இந்தியா

போதை மாப்பிள்ளை: கழுத்தை நீட்ட மணமகள் மறுப்பு

webteam

மது அருந்திய மணமகனை மணக்க முடியாது என கூறி இளம்பெண் ஒருவர் தனது திருமணத்தை நிறுத்தினார்.

சத்தீஸ்கர் மாநிலம், ராஜ்நந்த்காவோன் பகுதியை சேர்ந்த விவசாயியின் 19 வயது மகளுக்கும் அதே பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. திருமணம் நடக்க இருந்த சூழலில், மணமகன் மது அருந்தியது தெரிய வந்தது. மதுவுக்கு அடிமையானவரை மணந்துகொள்ள மறுத்து அந்தப் பெண் திருமணத்தை நிறுத்திவிட்டார். அந்த பெண்ணின் தைரியமான முடிவை அனைவரும் பாராட்டியுள்ளனர்.