கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் இன்று நடந்த, நம்பிக்கை வாக்கெடுப்பில் மனோகர் பாரிக்கர் வெற்றிப்பெற்றார்.
கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் 17 இடங்களிலும், பா.ஜ,க 13 இடங்களிலும் வென்றது. மகாராஷ்டிரவாதி சோமந்த கட்சி, கோவா பார்வர்ட் கட்சி, சுயேட்ச்சைகள் தலா 3 இடங்களில் வெற்றி பெற்றனர்.
மனோகர் பாரிக்கர் முதலமைச்சராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் மகாராஷ்டிரவாதி சோமந்தகட்சி, கோவா பார்வர்டு பிளாக் மற்றும் 2 சுயேட்சை வேட்பாளர்கள், பா.ஜ.கவுக்கு ஆதரவு அளித்தனர். இதனால் பெரும்பான்மைக்கு தேவையான 21 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு பாஜகவுக்கு கிடைத்தது. இதையடுத்து மனோகர் பாரிக்கருக்கு ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார். ஆனால், இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு தொடர்ந்து. மனோகர் பாரிக்கர் தனது பெரும்பான்மையை 16 ஆம் தேதி நிரூபிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி கோவா சட்டசபையில் இன்று காலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் மனோகர் பாரிக்கர் வெற்றிபெற்றார்.