இந்தியா

கொரோனாவிலிருந்து குணமடைந்தார் மன்மோகன் சிங் - மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!

sharpana

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடநலம் குணமடைந்து இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிவரும் நிலையில் பொதுமக்கள் மட்டுமல்லாமல் சினிமாத்துறையினர், அரசியல்வாதிகள் என பலதுறைகளின் பிரபலங்களும் கொரோனா தொற்றால் பாதிப்படைந்து வருகின்றனர். அதன்படி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் விரைவில் நலம் அடைய வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், இன்று முழு உடல்நலம் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார் மன்மோகன் சிங்.