மதத்தைக் காரணம் காட்டி, ’சொமாட்டோ’வில் ஆர்டர் செய்த உணவை கேன்சல் செய்தவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான சொமாட்டோவில் உணவு ஆர்டர் செய்த மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் அந்த உணவை கேன்சல் செய்துள்ளார். அதற்கான காரணத்தையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள் ளார். அதன்படி, '' இந்து அல்லாத ஒருவர் உணவை வழங்குவதால் சொமாட்டோவில் ஆர்டர் செய்த உணவை நான் கேன்சல் செய்கிறேன். நான் உணவு வழங்குபவரை மாற்றக்கோரினேன். மாற்றவில்லை. என் பணத்தையும் திருப்பித் தரவில்லை. உணவை ஏற்றுக்கொள்ளும்படி என்னை கட்டாயப்படுத்த முடியாது. எனக்கு பணம் திரும்ப வேண்டாம். நான் உணவை கேன்சல் செய்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவரது ட்வீட்டை குறிப்பிட்டு பதில் அளித்த சொமாட்டோ நிறுவனம் ’உணவுக்கு மதம் எதுவும் கிடையாது’ எனத் தெரிவித் தது. சொமாட்டோவின் பதிலுக்கு பலரும் ஆதரவு கருத்துகளையும், எதிர்க்கருத்துகளையும் பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில் அந்த ட்விட்டை பதிவு செய்த ஜபல்பூரைச் சேர்ந்த அமித் சிங் என்பவருக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பி யுள்ளனர். அதில், ’மக்களின் மத நம்பிக்கைகளை புண்படுத்துவது குற்றம்’ என்ற அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு ஜபல்பூர் காவல் கண்காணிப்பாளர் அமித் சிங், உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு தாசில்தார் முன் ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.