இந்தியா

‘மந்திர சடங்குகள் மூலம் பணத்தை இரட்டிப்பாக்குகிறேன்’ - ஒரு லட்சம் ரூபாயை இழந்த அதிகாரி!

கலிலுல்லா

பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி, ரூ.1லட்சத்தை அபகரித்துக்கொண்டு ஏமாற்றியவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மகாராஷ்டிராவின் தானே பகுதியைச் சேர்ந்த பங்கஜ் பவார். இவர் ஓய்வு பெற்ற முன்னாள் விமான போக்குவரத்து துறை ஊழியரிடம் என்னிடம் ரூ.1லட்சத்தை கொடுங்கள், அதை மந்திரச்சடங்குகள் மூலமாக இரட்டிப்பாக்கி தருகிறேன் என்று கூறியுள்ளார். இதை அந்த அதிகாரி நம்பியுள்ளார்.

இதையடுத்து, பவார் தம்பதிகள் இருவரிடமும் மந்திரங்களை உச்சரிக்க சொல்லிவிட்டு, ரூ.1லட்சம் ரூபாயை பெற்றுள்ளார். கண்களை மூடி மந்திரங்களை உச்சரித்துக்கொண்டிருந்தபோது, பவார் 1லட்சம் ரூபாயுடன் தப்பிச் சென்றுள்ளார். அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.