இந்தியா

மம்தா பானர்ஜி ஒருநாள் பிரசாரம் செய்ய தடை - தேர்தல் ஆணையம்

webteam

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஒரு நாள் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது.

முஸ்லீம் வாக்குகள் மற்றும் மத்திய பாதுகாப்பு படை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி தேர்தல் விதிகளை மீறியதாக பாஜக புகார் அளித்திருந்தது. இதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் மம்தா பானர்ஜிக்கு பரப்புரையில் ஈடுபட ஒருநாள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மம்தா மீது பாஜக அளித்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.