இந்தியா

'பெகாசஸ்' உளவு மென்பொருள் விவகாரம்: செல்போன் கேமராவை டேப் போட்டு ஒட்டிய மம்தா பானர்ஜி

JustinDurai

பெகாசஸ் மென்பொருள் விவகாரம் பூதாகரமாகி இருக்கும் நிலையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது செல்போன் கேமராவை டேப் போட்டு ஓட்டியுள்ளார்.

பெகாசஸ் மென்பொருள் மூலம் எதிர்க்கட்சி தலைவர்களின் அலைபேசிகள் உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி காணொலி வாயிலாக மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பெகாசஸ் மென்பொருள் குறித்து பேசிய அவர், தனது செல்போன் ஒட்டு கேட்கப்படுவதாகவும் எதிர்க்கட்சி தலைவர்களோடு தன்னால் பேச முடியவில்லை என்றும் கூறினார்.

தன்னுடைய செல்போன் கேமராவை TAPE போட்டு ஒட்டியிருப்பதாக கூறிய மம்தா, பெகாசஸ் மென்பொருள் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டு விசாரணை குழு அமைக்க வேண்டும் என்றார்.