இந்தியா

எழுத்தாளர் புனத்தில் குஞ்ஞப்துல்லா மரணம்

எழுத்தாளர் புனத்தில் குஞ்ஞப்துல்லா மரணம்

webteam

பிரபல மலையாள எழுத்தாளர் புனத்தில் குஞ்ஞப்துல்லா தனது 77வது வயதில் இன்று காலமானார்.

கேரளாவின் வடகரையில் 1940ஆம் ஆண்டு பிறந்த இவர், மலையாளத்தில் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவராக திகழந்தவர். 1980ஆம் ஆண்டு இவர் எழுதிய 'ஸ்மார சிலகள்' என்று நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கி இந்திய அரசு கௌரவித்தது. இவரது மஷ்ஹர் பெருவெளி, மருந்து ஆகிய நாவல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு பெருவாரியான வாசகர்களை பெற்றுள்ளது.