இந்தியா

பொறியாளர் மீது சேற்றை வாரி இறைத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.

webteam

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர், பொறியாளரின் மீது சேற்றை வாரி இறைக்கும் காட்சி வெளியாகியுள்ளது.

மும்பை - கோவா நெடுஞ்சாலையில் கனகவள்ளி என்ற இடத்தில் உள்ள பாலத்தில் காங்கிரஸ்‌ எம்எல்ஏ-வும், முன்னாள் முதலமைச்சர் நாராயண் ரானேவின் மகனுமான நிதேஷ் ஆய்வு நடத்தினார். அப்போது, பாலம் பழுதடைந்து இருந்ததால், பொறியாளர் பிரகாஷ் ஷதேகர் மீது காங்கிரஸ் எம்எல்ஏவும், அவரது ஆதரவாளர்களும் சேற்றை வாரி இறைத்தனர். மேலும், அவரை அவமதிக்கும் வகையில், பாலத்திலேயே கட்டிப் போட்டனர்.

முன்னதாக, மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கட்டடங்களை இடிக்க நகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டது.
இதற்கான பணியில் ஈடுபட்டிருந்த அலுவலரை‌ அனைவரின் முன்னிலையில் பாஜக எம்எல்ஏ‌ ஆகாஷ் விஜய்‌வர்கியா, கிரிக்கெட்
மட்டையால் தாக்கினார். அவர் ஆதரவாளர்களும் அரசு அதிகாரிகளை அடித்தனர்.