மகாராஷ்டிராவின் நாக்பூரில் 7 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது
கொரோனா மீண்டும் இந்தியாவில் பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிராவில் பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் இருந்து ஏறுமுகத்தில் உள்ளது. நேற்று மட்டும் 13659 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து மகாராஷ்டிரா அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரமாக கையிலெடுத்துள்ளது. வேகமாக கொரோனா பரவும் நாக்பூரில் 7 நாட்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
அதன்படி, மார்ச் 15 முதல் மார்ச் 21 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், அத்தியாவசிய தேவைகள் மட்டுமே செயல்படும் எனவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, கொரோனா அதிகரித்தால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் ஊரடங்கு அமல்படுத்த வேண்டிவரும். சில இடங்களில் வரும் நாட்களில் ஊரடங்கு அமலாகும். அது தொடர்பான ஆலோசனை நடைபெறுகிறது என தெரிவித்துள்ளார்