இந்தியா

மகாராஷ்டிரா மாநிலத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் இன்று திறக்கப்பட்டன

Veeramani

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதால் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் வழிபட இன்று முதல் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மும்பையிலுள்ள சித்தி விநாயக் கோவிலில் காலை முதலே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மாநிலத்திலுள்ள மசூதிகள், தேவாலயங்களிலும் பக்தர்கள் இன்று முதல் அனுமதிக்கப்படுகின்றனர். வழிபாட்டு தலங்களுக்கு வருவோர், கட்டாயம் முகக்கவசம் அணிந்து, கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.