இந்தியா

மூதாட்டிக்கு உதவி செய்த பெண் போலீசாருக்கு குவியும் பாராட்டுகள்

webteam

மூதாட்டி ஒருவருக்கு உடை மாட்டிவிட்ட பெண் போலீசாருக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்

சமூக வலைதளங்களில் பெண் போலீஸ் அதிகாரி சாரதா சுக்லா வைரலாகியுள்ளார். மூதாட்டி ஒருவருக்கு அன்பாக உடை மாட்டிவிடும் சாரதாவை இணையவாசிகள் பலரும் பாராட்டி வருகின்றனர். மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் அந்த வீடியோவை பகிர்ந்து சாரதாவுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார். 

அந்த வீடியோவில் உடை மாட்ட முடியாமல் தவித்த மூதாட்டிக்கு சாரதா உடை மாற்றி விடுகிறார். உடை மாட்டிவிட்டப்பிறகு சாரதாவை கட்டிப்பிடித்து மூதாட்டி நெகிழ்ச்சியாக ஆசிர்வாதம் செய்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பலராலும் பகிரப்படுகிறது. காவல் அதிகாரி சாரதா காவல் துறையினர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான மிகச்சிறந்த உதாரணம் என பலரும் தெரிவித்துள்ளனர்