இந்தியா

காங்கிரசை மூழ்கடிக்க ஓய்வின்றி உழைக்கிறார் ராகுல் - ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் விமர்சனம்

JustinDurai
காங்கிரஸை மூழ்கடிப்பதில் அக்கட்சியின் ராகுல் காந்தி தீவிரமாக இருப்பதாக மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் விமர்சித்துள்ளார்.
மத்தியப் பிரதேசம் தலைநகர் போபாலில் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதி ஒன்றில் பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான், நல்ல நிலையில் சென்றுகொண்டிருந்த பஞ்சாப் ஆட்சிக்கு ராகுல் இடையூறு ஏற்படுத்தியதாக கூறினார். நன்றாக ஆட்சி செய்த அமரிந்தர் சிங்கை நவ்ஜோத் சிங் சித்துவிற்காக பதவியிலிருந்து நீக்கியதாகவும் தற்போது சித்துவும் கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து ஓடிவிட்டதாகவும் சௌகான் விமர்சித்தார்.