மத்திய பிரதேசத்தில் ஊரடங்கை மீறிய கடைக்காரரை தாக்கிய போலீசார் ஒருவரை கிராம மக்கள் சரமாரியாக தாக்கினர்.
கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர மத்திய பிரதேசத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், சதர்பூர் கிராமத்தில் விதிமுறையை மீறி கடையை திறந்து வைத்திருந்தவரின் தலையில் போலீஸ்காரர் ஒருவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த கிராமத்தைச் சேர்ந்த முதியவர் உட்பட சிலர் போலீஸ்காரரை ஒரு வீட்டிற்குள் வைத்து கம்பால் சரமாரியாக அடித்தனர்.