தென்னிந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெற்கு பிராந்திய ராணுவ கமாண்டர் எஸ்.கே.சைனி தகவல் தெரிவித்துள்ளார்.
தென்னிந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என தகவல் கிடைத்துள்ளதாகவும் பயங்கரவாத செயல்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் சைனி தெரிவித்தார்.
மேலும் இந்தியா - பாகிஸ்தான் எல்லையான குஜராத்தின் சர்க் கிரீக் பகுதியில் கேட்பாரற்ற படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் சைனி குறிப்பிட்டார்.