இந்தியா

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு

jagadeesh

வடமேற்கு வங்கக்கடலில் வரும் 21 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கேரளா, கர்நாடகாவில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.