இந்தியா

கேரளா: சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு திறப்பு

Veeramani

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில், எடவம் மாத தொடக்கம் மற்றும் மாதாந்திர பூஜைகளுக்காக இன்று முதல் ஐந்து நாட்களுக்கு திறக்கப்படுகிறது.

கேரளாவில் உள்ள  சபரிமலை ஐயப்பன் கோயில் மலையாள மாதமான எடவம் மாத தொடக்கத்தை முன்னிட்டு இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மீண்டும் திறக்கப்படும் என்று  தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஐந்து நாட்களிலும் மாதாந்திர பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்யப்படும் என்றும், ஆனால் புதிய கொரோனா பொதுமுடக்க விதிகளின் காரணமாக பக்தர்கள் பார்வையிட அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும், பிற சிறப்பு விழாக்கள் நடத்தப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.