இந்தியா

நகைக் கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை

webteam

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் துப்பாக்கி முனையில் நகைக் கடையில் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சிசிடிவி பதிவு தற்போது வெளியாகியிருக்கிறது. அலகாபாத்தில் இயங்கி வரும் நகைக் கடை ஒன்றில் முகமூடி அணிந்த மூன்று பேர் நுழைகின்றனர்.‌ ஒருவர் துப்பாக்கியைக் காட்டி கடை ஊழியரை மிரட்டுவதும் மற்ற இருவர் நகைகளைக் கொள்ளை அடிப்பதும், பின்னர் மூவரும் தப்பிச் செல்வதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக ந‌கைக்கடை உரிமையாளர் காவல்நிலையத்தில் புகார்‌ அளித்துள்ளார். சிசிடிவி காட்சியைக் கொண்டு காவல்துறையினர் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.