இந்தியா

நாடு முழுவதும் 5 ஆம் கட்ட பொது முடக்கம் ! - "மன் கீ பாத்" தில் அறிவிக்கிறார் பிரதமர் ?

jagadeesh

இந்தியாவில் 5 ஆம் கட்ட பொது முடக்கம் குறித்த அறிவிப்பை இந்த வாரம் "மன் கீ பாத்" உரையில் பிரதமர் மோடி தெரிவிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முதன் முதலில் மார்ச் மாதம் 22 ஆம் தேதி ஒருநாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்பு மார்ச் 25 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வரையிலான 21 நாட்கள் நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதிலும் கொரோனா கட்டுக்குள் வராததால் மேற்கொண்டு 19 நாட்கள், அதாவது மே 3- ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

இதையடுத்து மே 17-ந்தேதி வரை அமல்படுத்தப்பட்ட 3-ம் கட்ட ஊரடங்காலும் கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் அடுத்த ஊரடங்கு மே 31 ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் நடைமுறையிலிருந்து வருகிறது. கொரோனா பாதிப்பில் டெல்லி, மும்பை, பெங்களூரு, புனே, தானே, இந்தூர், சென்னை, அகமதாபாத், சூரத், ஜெய்ப்பூர், கொல்கத்தா ஆகிய 11 நகரங்கள் வைரஸ் தொற்று நோய்களின் ஹாட் ஸ்பாட்களாக பட்டியலிடப்பட்டுள்ளன.

எனவே இந்தக் குறிப்பிடப்பட்ட நகரங்களில் ஊரடங்கில் சில தளர்வுகளுடன் நீடிக்கப்படுவது குறித்து வரும் 31 ஆ ம்தேதி 'மான் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அறிவிப்பார் எனக் கூறப்படுகிறது.